” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023
இலக்கம்-236
அலை ஓசை
—————//———
காற்றலையின் ஓசை
காதிற்கு இதமாக புகுகிறது
தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது
கடலில் உருண்டு பிரண்டு அலையோசை
காதலரை மகிழ வைக்குது
பாடும் குயிலின் குரலோசை
பண்ணிசையாளர்க்கு
பாடம் சொல்லி கொடுக்குது
கோயிலின் அதி காலை
மணியோசை
கடவுளை நினைத்து கும்பிட வைக்குது
விடியலில் சேவலின் கூவும் குரலோசை
படுக்கையை விட்டு எழும்ப வைக்குது
வீட்டை காக்கும் நன்றி
நாயின் குரலோசை
களவுகள் தேடும்
இராக் கள்வரைக் காட்டி கொடுக்குது
செவ்வாயில் இடம் பெறும் கவி ஓசை படிப்பு
கவிஞரின் உள்ளத்தை வாரி எடுத்து எழுத தூண்டுது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan