ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.10.2023
கவி இலக்கம்-239
ஆறு மனமே
———//-//——
ஆறு மனமே ஆறு -ஆண்டவன் கட்டளைகள் பத்து
இறைவன் அன்பில் தந்த பெரும் கட்டளை
மனிதன் நடை முறை படுத்துகிறானா
களவு செய்யாமலிருக்கிறானா
பொய் பேசாதிருக்கிறானா
விபச்சார செயலில் ஈடு படாமலிருக்கிறானா
தாய் தந்தையரை கனம் பண்ணுகிறானா்
இல்லாதவர்க்கு உதவிக் கரம் நீட்டுகிறார்களா
மனமே சொல் மனமே
வேசம் போட்ட வாழ்க்கை நல்ல விடை தருமா
ஏழையானவன் பணக்காரனாகலாம்
அரசனும் ஆண்டியாவான் சொல் மனமே சொல்
மனம் ஆறி வாழ நல்லவர்களாய் வாழ்ந்து காட்டுவோம்
நல்லது செய்து நாலு பேர் போற்ற வாழ்வோம்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading