சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

ஜெயா நடேசன்

ஒளியின்றி
ஒளிர்வெங்கு..

கவி இலக்கம்-1770

சூரிய ஒளியின் ஒளிக்கதிர்கள்
உடலில் சுடும்போது
மனம் ஒளிர் பெற்று மகிழ்கிறது
தீப ஒளி மெழுகுவர்த்தி
ஒளிர்வெங்கும்
சமய வழிபாட்டிற்கு ஏதுவாகிறது
அஞ்ஞானம் அகற்றி மெஞ்ஞானம் பிறக்க
வாழ்வில் ஒளி வீசி ஒளிருகின்றது
ஒளியின்றி உயிர்களுக்கு வாழ்வில்லை
இயற்கையே அர்த்தமற்று போய் விட ஏதுவாகின்றது
செடி கொடி மரங்களுக்கு உணவாக ஒளியே சத்தாகிறது
அன்பும் அறமும் தழைத்தோங்க
அமைதி சமாதானம் நிலவ
வாழ்விற்கு ஒளியாய் மிளிருகின்றது
இருள் அகற்றி ஒளி மிளிர உலகமே பிரகாசமாகும்
இல்லம் சிறக்க உள்ளம் மகிழ
ஒளியே ஏற்றி மகிழ்வோம் ஒளிர்வாக
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading