தங்கசாமி தவகுமார்

கவி : பூக்கட்டும் புன்னகை
03. 02. 2022

அந்தி வான அழகு
இயற்கையின் புன்னகை
ஆற்றங்கரை வருடல்
தென்றல் அதன் புன்னகை
மாலைப் பொழுதின் வானவில்
தூறலின் புன்னகை
தாயின் மடியின் தூக்கம்
தாய்மை மூச்சின் புன்னகை
அரிய நம் வரவு
அடுத்தவர் மனதில் பதிந்தால்
அது புன்னகை
அன்பை கொடுத்து
திறந்திடு மனதை
பூத்திடும் புன்னகை
வாழ்வினில் என்றும்!!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading