தடமது படைத்தெழும் தனித்துவம்

சர்வேஸ்வரி சிவருபன்

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஆகாய வீதியெங்கும் அலைவரிசை இசைந்துவர
ஆனந்தமாய் தனித்துவமாய் பாமுகம் பூத்திருக்க
காத்திரம் கொண்ட படைப்புக்கள் எத்தனையோ
தடமது படைத்தெழும் சாதனையும் நிறைந்ததங்கே
சரித்திரக் களமாக்கி படைப்புக்கள் தோன்றியங்கு
இருபத்தேழு அகவையிலே இன்முகமாய் வீசியுமே
தலமைத்துவம் தரனியிலே கால்பதித்து விளையாடி
தர்மசிந்தனைகள் தளராது விரிந்தாட

இறையருள் கூடிடவே இணைசேரும் மக்களுமே
தவறாத கடமையிலே நன்னெறியோடு களமாடி
என்றும் இயம்பட்டும் இலண்டன் வானொலி
காற்றலை சுழன்றுவர தேவகாணம் பரவட்டுமே
ஆ….ஆ….ஆ..கா…ஆ…கா

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading