தடமது பதித்தெழும் தனித்துவம்

சக்தி சிறினிசங்கர்

எண்சீர் விருத்தம்
சீர்வரையறை: விளம் மா விளம் மா/விளம் மா விளம் மா
அகவையில் உயர்ந்தே அரும்பெரும் சேவை
அலையினில் ஓசை அவனியில் கேட்க
மகத்துவம் கண்ட மாபெரூம் காட்சி
மனத்தினை நிறைத்து மலர்ந்தது பெருமை
புகலிட வாழ்வில் புதியதோர் சரிதம்
பூமியில் பரந்து பூத்தது தானே
நிகரிலாக் களமே நிமிர்ந்தது தானே
நித்தமும் படையல் நீளுது தானே!

ஆக்கமும் எழுத அணைப்பரே இவர்கள்
அருந்தமிழழ்ச் சிறார்கள் அகத்தினில் நிறைந்து
ஊக்கமும் கொடுத்தே உந்துதல் செய்வர்
உறுதுணை ஆகி உயர்த்திட உழைப்பர்
நோக்கமும் கொண்டு நொடிதனைக் காத்து
நோவையும் தாங்கி நின்றனர் சோடி
பாக்களில் போற்றிப் பாடுவோம் நாமும்
பாமுகம் தன்னை வாழ்த்தியே நிற்போம்!

தடமது பதித்துத் தனித்துவம் கண்டு
தளர்ந்திடா சேவை தரணியில் ஆற்றி
அடம்பனைப் போலே அகலவும் விரிந்து
அருந்தமிழ்த் தொண்டு அதிசயம் ஆக
இடர்களை வென்று இடைவிடா முயற்சி
இளையவர் கரங்கள் இணைந்திட வைத்துக்
கடந்தது அகவை கடமையில் என்றும்
கண்ணியம் காத்த காவலர் வாழ்க!

கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு வாழ்த்துகள்!
திரு.திருமதி.நடா மோகனுக்கு நன்றி!
அனைத்துக் கவிப்படைப்பாளர்கட்கும் பாராட்டுகள் கூறி அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading