சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தமிழன்னை நீயும்

சிவருபன் சர்வேஸ்வரி

தமிழன்னை நீயும்
>>>>>>>>>>>>>>>>>>>

பொங்கு தமிழே பொங்கிவரும் தமிழே

பொக்கிசமான மகிமைகள் நிறைந்ததும் தமிழே
நற்றமிழும் வீசும்போதினிலும் நல்கிடுமே நன்மைகளும்

நாட்டினிலே உயர்ந்தும் நிற்பது ம் தமிழே

புலவிவரும் தமிழ்மொழியே நீயும் வாழ்க

நிலவியும் நிற்பாயே இப்பாரெல்லாம் சிறக்கவே

குலவியுன்னையும் முகர்வோம் நாமும் என்றுமே

தழுவியும் நீயும் நிற்பாயே எம்முடனே

மூத்தோர் எங்கும் முழங்கிய மொழியே
மூவுலகையும் வென்றதும் அமுதத் தமிழே

முத்திரையும் பதித்தாயே நிரந்தரத் தமிழே
முழுமதியும் போன்று என்றும் உலாவருவாயே

சங்கம் வளரத்துமே சரித்திரம் கொண்டாய்
சந்தமும் வீசிடவே செந்தமிழானாய் என்றுமே

வாழ்க வாழ்க எங்கள் தமிழே
வரமது தருவாயே தமிழன்னையே நீயும்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan