பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

தமிழன்னை நீயும்

சிவருபன் சர்வேஸ்வரி

தமிழன்னை நீயும்
>>>>>>>>>>>>>>>>>>>

பொங்கு தமிழே பொங்கிவரும் தமிழே

பொக்கிசமான மகிமைகள் நிறைந்ததும் தமிழே
நற்றமிழும் வீசும்போதினிலும் நல்கிடுமே நன்மைகளும்

நாட்டினிலே உயர்ந்தும் நிற்பது ம் தமிழே

புலவிவரும் தமிழ்மொழியே நீயும் வாழ்க

நிலவியும் நிற்பாயே இப்பாரெல்லாம் சிறக்கவே

குலவியுன்னையும் முகர்வோம் நாமும் என்றுமே

தழுவியும் நீயும் நிற்பாயே எம்முடனே

மூத்தோர் எங்கும் முழங்கிய மொழியே
மூவுலகையும் வென்றதும் அமுதத் தமிழே

முத்திரையும் பதித்தாயே நிரந்தரத் தமிழே
முழுமதியும் போன்று என்றும் உலாவருவாயே

சங்கம் வளரத்துமே சரித்திரம் கொண்டாய்
சந்தமும் வீசிடவே செந்தமிழானாய் என்றுமே

வாழ்க வாழ்க எங்கள் தமிழே
வரமது தருவாயே தமிழன்னையே நீயும்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading