” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

தமிழ் பள்ளி

ராணி சம்பந்தர்

இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு பேரொளி பிறந்தது

திறனான கள்ளங்கபடமற்ற
சிறுவர் உள்ளங் கவரவே
துள்ளி விளையாடி அள்ளிக்
கற்ற படிப்பு சிரமேறியே
சித்திரமாய்ச் சீறிப் பறந்தது

ஆதியில் மண்ணில் எழுதியது
போதி மர நிழலில் உழுதே
பயிரிட்டது விதை ஊன்றியது

ஏதிலியின் தாக்கம் அதிலும்
பிறந்த மண் தாக்கம் உயிரில்
மேலாகவே உயர ஊன்றியது

தமிழ் பள்ளியில் தழுவியதோ
சிறுவர், இளையோர் வாசித்து
எழுதிய பயிற்சி பரீட்சையில்
மிகச்சிறந்து சித்தி பெற்றே
முத்திரை பொறித்தனரே .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading