நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

தாயுமானவர்

இரா.விஜயகௌரி
தாயுமானவர் என் தந்தையாகினார்
விந்தை உலகிலே எந்தை-முந்தை
உறவினை முழுதாய் நெஞ்சிலே
சிந்தை தெளிவுற சேர்த்த – சொந்தமாகினார்

நிந்தை செய்கிலர் நிதமும் தம்மை
உழைப்பின் ஆழி ஆக்கினார்-வாழ்வை
மகிழ்வின் தொடுகையாய் இழைய
வாய்ப்பை வழங்கி இசைந்தவர்

கூடிக் குதூகலம் இழைந்திட அவர்
வருடிக் கொடுத்துமே வசந்த இழையில்
பின்னினார் அனைத்தும் உணர்ந்து
செப்பினார் உணர்வில் எழுதினார்

ஆனாலும் ஆனாலும் என்ன பின்னர்
மதுவின் பிரியராய் மயங்கி விழுந்ததால்
தாயைத்தஙித்தெழ வைத்தே மறைந்தவர்
நினைவில் உறைகிறார் நேர்மை வாழ்வில் நிறைகிறார்

Nada Mohan
Author: Nada Mohan