கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தாயுமானவர்

இரா.விஜயகௌரி
தாயுமானவர் என் தந்தையாகினார்
விந்தை உலகிலே எந்தை-முந்தை
உறவினை முழுதாய் நெஞ்சிலே
சிந்தை தெளிவுற சேர்த்த – சொந்தமாகினார்

நிந்தை செய்கிலர் நிதமும் தம்மை
உழைப்பின் ஆழி ஆக்கினார்-வாழ்வை
மகிழ்வின் தொடுகையாய் இழைய
வாய்ப்பை வழங்கி இசைந்தவர்

கூடிக் குதூகலம் இழைந்திட அவர்
வருடிக் கொடுத்துமே வசந்த இழையில்
பின்னினார் அனைத்தும் உணர்ந்து
செப்பினார் உணர்வில் எழுதினார்

ஆனாலும் ஆனாலும் என்ன பின்னர்
மதுவின் பிரியராய் மயங்கி விழுந்ததால்
தாயைத்தஙித்தெழ வைத்தே மறைந்தவர்
நினைவில் உறைகிறார் நேர்மை வாழ்வில் நிறைகிறார்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading