” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திசைகாட்டி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-37

10-10-2024

திசைகாட்டி

திசைகாட்டியாய்
தின வழிகாட்டியாய்
திறமை புகட்டியவரே
உளியால் கல் செதுக்கி
உருவம் கொடுப்பது சிற்பி
சொல்லால் எமை
செதுக்கி வெற்றியாளன்
ஆக்கிய நல்ஆசானே!

அறியாமை இருளகற்றி
அறிவொளி ஏற்றி
ஓயாது ஓடோடி
ஊருக்குப் பயன்
விளைக்கும்
பேராறு நீங்களல்லோ
உங்கள் பெருமைக்கு
நிகருண்டோ!

மண்ணில் அ தொடங்கி
தாம் வைக்க
விண்வெளி நாம்
சென்றாலும்
மனமுருகி பெருமிதம்
கொண்டவரே சேவைக்கு ஈடேது
தடம் புரளும் எங்களுக்கு தரமான
திசைகாட்டியும் நீங்களே!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan