பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

திசை காட்டிகள்

ராணி சம்பந்தர்

03.10.24
ஆக்கம் 332
திசை காட்டிகள்

திசை காட்டியின் தீராத
தாகம்
திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில்
பக்குவமாய்ச் சேர்த்து
பாரமெடுத்த பாகம்

ஊக்கமுடன் விழி மேல்
விழி வைத்து தூக்கம்
இன்றிய வேகம்
தாழ்வு மனப்பான்மை
நீக்கி வசதியின்மை
போக்கி வாழ்வின்
சோகம் மறைக்க
வேறு திசை திருப்பிய
தாகம்

சக்தியினால் புத்தகம்
வாசித்திடு
புத்தியினால் சித்தி
அடையத் தேடலில்
விளைச்சலிட்டு
உயர்ந்திடென
ஊட்டிய வழிகாட்டிகள்

சுயமரியாதையுடன்
தைரியமாய் உழைத்து
வாழ்வில் ஊன்றிட
நின்றிட்ட திசைகாட்டி
தெய்வங்களே எத்திசை
இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப்
புகழ் மாலை போட்டிடுவோமே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading