நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

திண்டாடும் மே தினம்

இது மாந்தர் கொண்டாடும்
தினமே அன்றித் திண்டாடும்
கறுப்பு நாளே மே தினமாகும்

எழுதத் துடிக்கும் எழுத்துக்கள்
எழுதமுடியா தவிக்கும் வலிகள்
மரத்துப் போன கை சோர்வுகள்

வேலை வேலை என வேலை
வாங்கிச் சுமந்து சுட்டெரித்த
உணர்வுகள் ஊமைப் பசிகள்

ஏனிந்தப் பரிதாப வாழ்வு பாரினில்
காணுமிந்த முதலாளி வர்க்கமே
ஏமாற்றிப் பிழைத்த சொர்க்கமே

வினாவினால் பதவி பறி பறிபோக
பணம் முணுமுணுத்தால் குறியாக
அதோ கதி அந்தோ பரிதாபமாகும்

கொழுத்த நண்டு பழுத்த காய்கள்
தொழிலாளியை விழுங்கும் பெரு
மலைப் பாம்புகளே முதலாளிகள்
உளுத்துப்போன மே தினமதில் .

Nada Mohan
Author: Nada Mohan