நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன்
தினம்தினமாய்—-
உழைப்பின் வேரே செழிப்புறும்
உருளும் நாளின் காத்திடம்
அகிலப்பரிதி விழிப்புறும்
ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும்

வற்றாச்சுரங்க வரம்பிலே
வலிந்து செலுத்தும் படகிலே
நிறைந்து நிமிரும் வியர்வையே
நித்தம் நடத்தும் உடல்சமர்

வரவு செலவுப் பயணியாய்
வருமானம் ஈட்டும் தேனீயாய்
உழைப்பின் உரமே உன்னதம்
உலக விழிப்பின் உயர்தினம்

மேதினம் மேதினி ஆள்கையில்
மேன்படும் வர்க்கமே விழித்தெழு
யாழினில் குரலிசை மீட்டிடும்
நரம்புகள் புடைக்கும் நம்பிக்கை
உழைப்பே உயர்வின் முதற்படி
உலகை ஆளும் திறன்வழி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan