” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தியாகம் 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025

விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத் தானம் தந்து,
தவித்தோர்க்கு குளிர்ச்சி அழிக்கிறது.

பெற்றோரின் தியாகத்திற்கு நிகர்
பெரிதாய் ஏதுமில்லை இவ்வுலகில்
மெழுகுவர்த்தியாய் தமை உருக்கி
மேலோங்க துணை பெற்றவரே

சிலர் வாழ்ந்து மறைவர்,
சிலர் மறைந்தும் வாழ்வர்
சரித்திரத்தில் தியாகிகள்
சாய்வதில்லை உயிரற்றும் வாழ்வரே

கோபுரத்தின் அத்திவாரம் போலும்
கோலகலமாய் ஒளி தரும் விளக்கு திரியாயும்
பல தியாகங்கள் மறைகின்றன
பார் போற்றும் தியாகியாய் தொடர்வோம் நாம்.

Jeba Sri
Author: Jeba Sri