கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
திருமணம்
ஆயிரம் காலத்துப் பயிர்
ஆயிரம் பொய்களே வேர்
சத்திர சாம்பிரதாயங்கள் நகர்த்தும் தேர்
சங்கடங்கள் பலதும் இருக்குது பார்
கூடி நிற்கும் சொந்த பந்தம்
குதித்துக் கொட்டமடிக்கும் விடலை க்கூட்டம்
சாதிப் படகிலேயே நடக்கும் பயணம்
சீதனத் தொகையே
தொடுக்கும் பயணம்
நீதி நீயாயமற்ற பேரம்
நிதிநிலமைகளே பெரும்பாலும் ஆளும்
பசையுள்ள பெண்ணே வாழும்
வழியற்ற பெண்ணோ காயும்
இசைவற்ற செயல்களால்
இங்கிதமற்ற நிகழ்வுகளால்
பழிபலசூடி
முதிர்கன்னியாயே மூப்பைத் தழுவும்
முகவரியும் தொடராமலே நழுவும்
கூடிச்செய்த திருமணம்
கூடச்செய்த திருமணம்
வாடவும் செய்யும்
வாட்டவும் செய்யும்
வாழவும் செய்விக்கும்
நாட்டத்தைப் பொறுத்தே
நாலும் நடக்கும்
நன்மைதீமை கிடைக்கும்
ஆணுக்கும் பெண்ணுக்குமே திருமணம்
ஆனாலும் இப்போ நடக்குது
வீணுக்கு சிலதிருமணம்
சந்ததிக் காப்பே நறுமணம்
சாய்த்திட எண்ணுதல்
தரும்சங்கடம்
மனோகரி. ஜெகதீஸ்வரன்.
