“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

திருமணம்

ஆயிரம் காலத்துப் பயிர்
ஆயிரம் பொய்களே வேர்
சத்திர சாம்பிரதாயங்கள் நகர்த்தும் தேர்
சங்கடங்கள் பலதும் இருக்குது பார்

கூடி நிற்கும் சொந்த பந்தம்
குதித்துக் கொட்டமடிக்கும் விடலை க்கூட்டம்

சாதிப் படகிலேயே நடக்கும் பயணம்
சீதனத் தொகையே
தொடுக்கும் பயணம்
நீதி நீயாயமற்ற பேரம்
நிதிநிலமைகளே பெரும்பாலும் ஆளும்

பசையுள்ள பெண்ணே வாழும்
வழியற்ற பெண்ணோ காயும்
இசைவற்ற செயல்களால்
இங்கிதமற்ற நிகழ்வுகளால்
பழிபலசூடி
முதிர்கன்னியாயே மூப்பைத் தழுவும்
முகவரியும் தொடராமலே நழுவும்

கூடிச்செய்த திருமணம்
கூடச்செய்த திருமணம்
வாடவும் செய்யும்
வாட்டவும் செய்யும்
வாழவும் செய்விக்கும்
நாட்டத்தைப் பொறுத்தே
நாலும் நடக்கும்
நன்மைதீமை கிடைக்கும்

ஆணுக்கும் பெண்ணுக்குமே திருமணம்
ஆனாலும் இப்போ நடக்குது
வீணுக்கு சிலதிருமணம்
சந்ததிக் காப்பே நறுமணம்
சாய்த்திட எண்ணுதல்
தரும்சங்கடம்

மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading