” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமணம்

ஆயிரம் காலத்துப் பயிர்
ஆயிரம் பொய்களே வேர்
சத்திர சாம்பிரதாயங்கள் நகர்த்தும் தேர்
சங்கடங்கள் பலதும் இருக்குது பார்

கூடி நிற்கும் சொந்த பந்தம்
குதித்துக் கொட்டமடிக்கும் விடலை க்கூட்டம்

சாதிப் படகிலேயே நடக்கும் பயணம்
சீதனத் தொகையே
தொடுக்கும் பயணம்
நீதி நீயாயமற்ற பேரம்
நிதிநிலமைகளே பெரும்பாலும் ஆளும்

பசையுள்ள பெண்ணே வாழும்
வழியற்ற பெண்ணோ காயும்
இசைவற்ற செயல்களால்
இங்கிதமற்ற நிகழ்வுகளால்
பழிபலசூடி
முதிர்கன்னியாயே மூப்பைத் தழுவும்
முகவரியும் தொடராமலே நழுவும்

கூடிச்செய்த திருமணம்
கூடச்செய்த திருமணம்
வாடவும் செய்யும்
வாட்டவும் செய்யும்
வாழவும் செய்விக்கும்
நாட்டத்தைப் பொறுத்தே
நாலும் நடக்கும்
நன்மைதீமை கிடைக்கும்

ஆணுக்கும் பெண்ணுக்குமே திருமணம்
ஆனாலும் இப்போ நடக்குது
வீணுக்கு சிலதிருமணம்
சந்ததிக் காப்பே நறுமணம்
சாய்த்திட எண்ணுதல்
தரும்சங்கடம்

மனோகரி. ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan