பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் வாரம் 182 26.7.2022

தலைப்பு !
துணிவே துணை”
துணிவே துணையாய் தூணாய் நின்றவள்
பணிவாய் மனத்தினில் பதியம் போட்டவள்
எண்ணிய செயலினை எளிதினில் முடித்தவள்
திண்ணமாய் நின்று திறமையை போற்றியவள்

தன்கையே தனக்குஉதவி தைரியம் காத்தவள்
தென்றலுடன் கவிதையில்தெம்மாங்கு இசைத்தவள்
புன்னகை அகம்முகம் பூரிக்க வைத்தவள்
மன்றினில்்பாமுகம் மனத்தினில்வி தைத்தவள்

நித்தமும்்தென்றலாய் நிகழ்வினில் வீசுவாள்
மொத்தமும் தாங்கிய முகத்துடன் பேசுவாள்
எத்தனை தடையையும் எதிர்கொண்டு நாடுவாள்
தத்துவப் பெண்ணவள் தரணியை ஆளுவாள்

நன்றி வணக்கம் 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading