திருமதி.செல்வி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா!

சந்தம்சிந்தும் சந்திப்பு
“”””””””””””””””””””
தலைப்பு:-மணி
“””””
மணியொன் றடிக்கும் மதிக்குள் விதியாய்
தணிக்கும் ஒலியோ தழைந்தே சுருங்கும்
பிணிகொள் உடலம் பிதற்றும் பெயரும்
அணியாய் உறவும் அணைத்தே மொழியும்

கணித்தே உரைப்பர் கடுகும் பயணம்
பணிந்த உளமோ பரவும் பரமனை
துணிவை அருகில் துணையாய் அழைக்க
மணியொன் றடித்த மலைப்பை மறந்தே

தணிப்பான் தயாவாம் தாதையை அணுக
பிணிக்கோர் மருந்தாம் பிறவா நிலையை
அணியாய் அருளும் அவனே இறையாய்
கணிக்கும் மனமே கழிவை அகற்று

பணியை அணியும் பரமன் பதத்தில்
பணிகள் இயற்றும் பதத்தை விரும்பித்
துணிந்துன் துயரம் துரத்தும் விதத்தில்
மணியொன் றடிப்பாய் மயங்கா திருந்தே!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading