திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 100

தலைப்பு — விஞ்ஞான விந்தை

விஞ்ஞானத்தின் விந்தை முடிவில்லா அண்டத்தில்
மெஞ்ஞானத்தின் அடையாளங்கள் எல்லையில்லா மதங்களில்
விபரங்களை தேடுது விண்கலன்களாய் விண்ணகத்தில்
மெய்மறக்குது மனங்களும் மனிதர்களும் விஞ்ஞானத்திடம்.

எத்தனை அறிவியல் ஆரவாரமாய் இருந்தாலும்
அத்தனையும் உதவவில்லை ஆயுளை கூட்டுவதற்கு
கூத்தனை நம்பிதான் உயிர்களும் வாழுது
அறிவியல் வளர்ந்தும் ஆண்டவனை மேடுது.

ஓருயிர் காப்பாற்ற பல்லுயிர் போகுது
இரூயிர் என்பதெல்லாம் கவிதையில் மட்டுமே
கருவினில் அழிப்பதும் விஞ்ஞான விந்தைதானே
அருவமாய் காப்பவன் இறைவன் மட்டுமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading