” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 100

தலைப்பு — விஞ்ஞான விந்தை

விஞ்ஞானத்தின் விந்தை முடிவில்லா அண்டத்தில்
மெஞ்ஞானத்தின் அடையாளங்கள் எல்லையில்லா மதங்களில்
விபரங்களை தேடுது விண்கலன்களாய் விண்ணகத்தில்
மெய்மறக்குது மனங்களும் மனிதர்களும் விஞ்ஞானத்திடம்.

எத்தனை அறிவியல் ஆரவாரமாய் இருந்தாலும்
அத்தனையும் உதவவில்லை ஆயுளை கூட்டுவதற்கு
கூத்தனை நம்பிதான் உயிர்களும் வாழுது
அறிவியல் வளர்ந்தும் ஆண்டவனை மேடுது.

ஓருயிர் காப்பாற்ற பல்லுயிர் போகுது
இரூயிர் என்பதெல்லாம் கவிதையில் மட்டுமே
கருவினில் அழிப்பதும் விஞ்ஞான விந்தைதானே
அருவமாய் காப்பவன் இறைவன் மட்டுமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/03/2023

Nada Mohan
Author: Nada Mohan