மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 100

தலைப்பு — விஞ்ஞான விந்தை

விஞ்ஞானத்தின் விந்தை முடிவில்லா அண்டத்தில்
மெஞ்ஞானத்தின் அடையாளங்கள் எல்லையில்லா மதங்களில்
விபரங்களை தேடுது விண்கலன்களாய் விண்ணகத்தில்
மெய்மறக்குது மனங்களும் மனிதர்களும் விஞ்ஞானத்திடம்.

எத்தனை அறிவியல் ஆரவாரமாய் இருந்தாலும்
அத்தனையும் உதவவில்லை ஆயுளை கூட்டுவதற்கு
கூத்தனை நம்பிதான் உயிர்களும் வாழுது
அறிவியல் வளர்ந்தும் ஆண்டவனை மேடுது.

ஓருயிர் காப்பாற்ற பல்லுயிர் போகுது
இரூயிர் என்பதெல்லாம் கவிதையில் மட்டுமே
கருவினில் அழிப்பதும் விஞ்ஞான விந்தைதானே
அருவமாய் காப்பவன் இறைவன் மட்டுமே.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/03/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading