” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

தலைப்பு — மனங்களில் வாழலாம்

போராட்ட வாழ்க்கை பாரினில் வாழ்வானது
பாராட்டுக்கு பணக்கட்டுகள் போதாது போராடுது
பேராசை பொலிந்து கூட்டுது பெருஞ்சினத்தை
பாராவசமாய் ஏறுது பலரது தலைகளில்

பொறாமையால் மனங்களில் வஞ்சகம் வளர்க்காது
இறவாமையை இசைந்து இணைந்து ஏற்று
உறவுகளை உள்ளத்தால் உண்மையாய் உணர்ந்தால்
குன்றாத அன்போடு மனங்களில் வாழலாம்.

புத்தியுடன் வாழந்து பகுத்தறிவை வளர்த்தால்
சத்தியத்தை நிறுத்தி சந்ததியை உயர்த்தினால்
பக்தியுடன் பரம்மனை பரவசமாய் வழிபட்டால்
உத்தமர்களாய் இறுதிவரை மனங்களில் குடியிருக்கலாம்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London

Nada Mohan
Author: Nada Mohan