திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 250

தலைப்பு – பொங்கலோ பொங்கல்

தையும் வந்தது நம்பிக்கையும் கூடியது
கைகள் இணைந்தன வாழ்க்கையும் சுகமானது
வைகறை விடியல்கள் வாட்டத்தைப் போக்கியது
பைங்கிளியின் பேச்சு பட்டாம்பூச்சியின் வண்ணம்.

பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் மனங்கள்
மங்களங்கள் நிறையட்டும் மாற்றங்கள் தொடரட்டும்
திங்களவன் வரவு திசையெல்லாம் பரவட்டும்
எங்கும் அமைதி ஏமாற்றங்கள் குறையட்டும்

பொங்கல் சுவைபோல் பொலிவுகள் நிறையட்டும்
கரும்புபோல் இனிப்பு நீரிழிவுகளை அடக்கட்டும்
இரும்புப்பெட்டி பணங்கள் வறுமையை ஒழிக்கட்டும்
திருத்தட்டும் அதிகாரங்கள் புதிய வருடத்தில்.

நன்றி வணக்கம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/01/2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading