” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 250

தலைப்பு – பொங்கலோ பொங்கல்

தையும் வந்தது நம்பிக்கையும் கூடியது
கைகள் இணைந்தன வாழ்க்கையும் சுகமானது
வைகறை விடியல்கள் வாட்டத்தைப் போக்கியது
பைங்கிளியின் பேச்சு பட்டாம்பூச்சியின் வண்ணம்.

பொங்கலோ பொங்கல் பொங்கட்டும் மனங்கள்
மங்களங்கள் நிறையட்டும் மாற்றங்கள் தொடரட்டும்
திங்களவன் வரவு திசையெல்லாம் பரவட்டும்
எங்கும் அமைதி ஏமாற்றங்கள் குறையட்டும்

பொங்கல் சுவைபோல் பொலிவுகள் நிறையட்டும்
கரும்புபோல் இனிப்பு நீரிழிவுகளை அடக்கட்டும்
இரும்புப்பெட்டி பணங்கள் வறுமையை ஒழிக்கட்டும்
திருத்தட்டும் அதிகாரங்கள் புதிய வருடத்தில்.

நன்றி வணக்கம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/01/2024

Nada Mohan
Author: Nada Mohan