” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி.பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —160

தலைப்பு — இன்சொலால் பலரையும் கவர்ந்து.

பொறாமைப் புகையால் பொறாமை உருவாகுது
வராமை தராமையால் வாட்டம் வரவாகும்
இராப்பகல் துயரால் இன்னல் இணைவாகுது
இராது தொல்லைகள் இவற்றை அகற்றிடின்.

வெறுப்பால் கோபம் வெளிவரும் நெருப்பாய்
நெருக்குமிது அமைதியை உருக்கும் உண்மையை
பெருக்கும் பகையால் பலாத்காரம் மிகையாகும்
பொறுமையுடன் நடந்து பெறுவீர் நிம்மதி.

பணிவுடன் இன்சொலால் பலரையும் கவர்ந்து
துணிவுடன் பேராசைத் துயரைக் களைந்து
மனிதப் பண்புடன் மேன்மையுற உழைத்து
புனிதமாய் புவியில் பெருமையுடன் வாழ்வீர்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(01/02/2022)

Nada Mohan
Author: Nada Mohan