திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு —165

தலைப்பு — திமிர்

அறியாமை நிலையும் புரியாமை விளைவும்
அறிவை மடித்து அலையாய் அடித்து
வெறிபிடித்த ஒன்றாய் வெளிவரும் திமிராய்
வெறுப்பையிது வளர்க்கும் வீண்பேச்சை விதைத்து.

செருக்குக் காட்டின் சேர்ந்திடும் கவலைகள்
உருக்கமாய் நடப்பின் உயர்வு வரவேற்கும்
கருத்தை உணர்ந்து செருக்கை விலத்திடின்
நெருங்கும் நல்லன சுருங்கும் தீயன.

தவிர்த்து நிறுத்திடின் திமிரை செருக்கை
அவித்திட வைத்திடின் ஆவணச் செயல்களை
குவித்திடும் குதூகலம் கனிந்திடும் அமைதி
புவியில் மங்கலம் பொங்கிடும் பொலிவுடன்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
08/03/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading