திறனின்மேன்மை தீட்டும் குழந்தைகளே…..,,,

இரா.விஜயகௌரி

வரமென வாய்த்த வழித்தோன்றலிவர்
வைகறை விடியலில் ஆதவப் பேரொளி
நித்தியம் மலரும்நிமிர்ந்தெழும் ஆளுமை
வல்லமை நிறைந்த வைகறைக்குயில்கள்

பேதமை களைந்த பெருவெளிச்சங்கள்
பேணிக்காத்திடின் வல்லமைச்சுடரொளி
விடியலை எழுதிட வலிந்தெழும் கரங்கள்
வேண்டிக் காத்திடுயர்ந்தெழும் தோழமை

கடவுளின் கரங்களில்கரணையின் மனுக்கள்
காத்திரம் நிறைத்த சூத்திர தாரிகள்
அறிந்தால் புரிந்தால் அறிவின் பொக்கிஷம்
தெளிந்தவர்கண்களில். தேவதை வடிவம்

செயற்திறன் மிக்கசேவையின் மைந்தர்
பாமுகப் பந்தலின் பரவசத் தூதுவர்
கள்ளம் கபடம் இல்லாத மானிடர்
உணர்ந்து உரைத்தால் உயர்வின் திறனிவர்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading