” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…

உழவால் பண்படும் நிலம் போல
உருவாக்கத் திறனால் மேம்படும் குழந்தைகளே
நிறைவில் நிறைமதி போன்றவர்கள்
நிலாவைப் போல ஜொளிப்பவர்கள்
அறிவால் அடித்தளம் பாலமிடும்
அன்பால் கோபுரக் கோலமிடும்
மேன்மை உறவில் பாசமிட்டு
மேதினி நிறைகின்ற பேரன்பில்
பேதமறியாப் பிரசவத்தில்
பிறப்பின் வலுவால் பேதலித்து
காலம் கனிந்த உற்சாகம்
கணதி குன்றிடும் மனத்திடமும்

முடியுமென்ற முழுமையினை
பாரே வியக்கும் பாமுகமாய்
திறமை வளர்க்கும் தேட்டமென
நிமிர்வை புடமாய் இட்டு வைக்கும்
நீண்ட சேவை வைப்பகமே

திறனின் மேன்மை தீட்டுகிறாய்
திகழ்வோம் விண்ணின் உடுக்களென
அறிவோம் அர்ப்பண அரும்பொழுதை
உயர்வோம் உலகில் உள்ளன்பில்
திறமை தீட்டிய தேட்டகத்தின்
தீபச் சுடராய் திகழொளியாய்!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan