” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

கவி 721

திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே

இவர்களின் உலகம் எவர்க்கிங்கு தெரியும்
இவர்களின் திறன்கள் யாருக்கிங்கு புரியும்
தனித்துவமான மன உணர்வினைக் கொண்டு
தனிப்பட்ட திறமையால் மிளிர்கின்றார்கள் இன்று

கொண்டாலே ஆர்வம் ஒரு துறையில்
கண்டும் விடுவார்கள் கரையினை நிறைவில்
இறுகிய மதியும் இழகியே உருவாக்கியது
சுருங்கிய மனதும் சிந்தனையை கருவாக்கியது

எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்து
சொல்வதில் கொஞ்சம் பிடிவாதத்தையும் சேர்த்து
ஒன்றையே மறுபடியும் செய்தாலும் அருமை
ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களினால் பெருமை

அபாரமான ஞானம் உடையவர்களென்பது உண்மையே
விவரமான குழந்தைகளிவர்கள் இவருலகம் மென்மையே
ஊக்கங்களோடு ஏக்கங்களின்றி பூத்துவிடும் பூக்கள்
தேக்கியே திறன்களை காவிச்செல்லுமே நாட்கள்

ஜெயம்
24-04-2024

Nada Mohan
Author: Nada Mohan