” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்..

திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகள்..

சின்னச் சின்னச் சிட்டுக்களே
சித்திரமாய் வந்த சொத்துக்களே

கண்ணிலே ஆடும் கண்மணிகள்
காலத்தில் ஆளும் நாயகர்கள்

வென்னிலாப் போன்ற மின்மினிகள்
வெகுமதியான பொன்மணிகள்
பாலவயதிலே துறுதுறும்பு பார்ப்பவர் நெஞ்சிலே கிளுகிளுப்பு

சோலைவனத்துப் பூங்குயில்கள் சாதனை செய்யும் பேரொளிகள்

எத்தனையாற்றல்கள் எத்தனை திறமைகள்

எத்தர்களில்லாத நற்குணங்கள்

சுட்டித்தனங்கள் நிறைந்தவர்கள் சுதந்திர எண்ணம் பூண்டவர்கள்

வண்ணத் திலகங்கள் ஆனவர்கள்
வாழ்விலே மலர்ந்த பொக்கிசங்கள்

சோம்பல் இன்றியே நிற்பவர்கள்
சங்கீதமாக இசைப்பவர்கள்

பூஞ்சிட்டுக் கன்னங்கள் கொண்டவர்கள்

புதுமைகள் பொங்கிடப் பிறந்தவர்கள்
திறனில் மேன்மை கொண்டவர்கள் தீட்டும் குழந்தைகளே வாழி! வாழி! …..

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan