துளிர்ப்பாகும் வசந்தம்

துளிர்ப்பாகும் வசந்தம் (709)

காலத்தின் மாற்றமதில்
கோடையும் மாரியும்
ஞாலத்தின் தோற்றமதில்
குளிராயும் வெயிலாயும்

அழகான மரங்களும்
அடையாளம் களைந்து
அனுதினம் உதிர்த்து
அழிந்து போவதும்

தளிர் உயிர்ப்பாகி
குளிர் மறைவாகி
வெளிர் வரவாகி
மலர் பிறப்பாகி

வசந்தம் வந்தாலே
அகமும் மகிழ்வு
சுகந்தம் நிலைதனில்
துளிர்ப்பாகும் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading