துளிர்ப்பாகும் வசந்தம்

துளிர்ப்பாகும் வசந்தம் (709)

காலத்தின் மாற்றமதில்
கோடையும் மாரியும்
ஞாலத்தின் தோற்றமதில்
குளிராயும் வெயிலாயும்

அழகான மரங்களும்
அடையாளம் களைந்து
அனுதினம் உதிர்த்து
அழிந்து போவதும்

தளிர் உயிர்ப்பாகி
குளிர் மறைவாகி
வெளிர் வரவாகி
மலர் பிறப்பாகி

வசந்தம் வந்தாலே
அகமும் மகிழ்வு
சுகந்தம் நிலைதனில்
துளிர்ப்பாகும் சிறப்பு

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading