துளிர்ப்பாகும் வசந்தம்

இரா.விஜயகௌரி
சுழன்றெழுதும் வாழ்வியல் போல்
சுற்றியெழும் இயற்கை எழில்
விந்தையிந்த உலகியலில்- நிதம்
வியக்க வைக்கும் பருவ மங்கை

இங்கு வசந்தத்தின் வர்ணங்களால்
மயக்க வைக்க நிலப்பரப்பில்
ஆதவனார் இசைந்தசைய – துளிர்ப்பாய்
பசுமையெழில் கொஞ்சி வருகின்றாள் வசந்த மகள்

குருத்தெறியும் அரும்பசைய கொஞ்சி மகிழ்
குருவிகளும் இசையொலிக்க வண்டினங்கள் ஆர்பரிக்க
வானமகள் நீர் தெளித்து வாழ்த்திசைக்க
பூமிமகள் பசுமைக்குள் நிறைகின்றாள் இங்கு

ஆம் மனங்களிலே வசந்தம்
மரங்களுக்களையும் மகரந்தம் தழுவி எழ
நுகர்தெழுந்த வண்டினங்கள் குலவையிட
மாந்தருள்ளும் மறுமலர்ச்சி-மீண்டெழுதும்வசந்தமாய்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading