29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
மூடிய கண்கள்
திறக்கவில்லை
குனிந்த தலை
நிமிரவில்லை
கட்டப்பட்ட கைகளும்
அவிழ்க்கப்படவில்லை…
வாய்ப் பேச்சுக்கள்
சபை ஏறவில்லை
உண்ணா விரதங்கள்
கை கூடவில்லை
மெளன விரதங்களும்
கலைக்கப்படவில்லை…
தீச்சுடர்கள்
வெளிச்சம் தரவில்லை
மெழுகு திரிகள்
சுடரவில்லை
மின் விளக்குகளும்
ஒளி கொடுக்கவில்லை…
மாற்றங்கள்
நடக்கவில்லை
நம்பிக்கைகள்
இழக்கப்படவில்லை
கேள்விகள்
தொடுக்கின்றோம்
விடியுமா தேசம்???
-துவாரகன் சாமினி-
24.09.2024
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.