” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துவாரகன் ஷாமினி

மூடிய கண்கள்
திறக்கவில்லை
குனிந்த தலை
நிமிரவில்லை
கட்டப்பட்ட கைகளும்
அவிழ்க்கப்படவில்லை…

வாய்ப் பேச்சுக்கள்
சபை ஏறவில்லை
உண்ணா விரதங்கள்
கை கூடவில்லை
மெளன விரதங்களும்
கலைக்கப்படவில்லை…

தீச்சுடர்கள்
வெளிச்சம் தரவில்லை
மெழுகு திரிகள்
சுடரவில்லை
மின் விளக்குகளும்
ஒளி கொடுக்கவில்லை…

மாற்றங்கள்
நடக்கவில்லை
நம்பிக்கைகள்
இழக்கப்படவில்லை
கேள்விகள்
தொடுக்கின்றோம்
விடியுமா தேசம்???

-துவாரகன் சாமினி-
24.09.2024

Nada Mohan
Author: Nada Mohan