நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தூசோடு மாசும்

ராணி சம்பந்தர்

தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழியும்,குரலுமே வராது
பசை போல் ஒட்டி ஒட்டி முட்டியதே
கண்ணீரும் வடிந்து வடிந்து ஓடுமே

மாசு படிந்தது புவியின் போராலே
காற்றலையும் காவி பிடித்த குறை
கறையாகப் போராடிக் களைக்கப்
பறை சாற்றும் எரிமலைப் பாறை
உறைந்துருகிய நெருப்புக்குழம்பு

பூசி மெழுகி ஊர் ஊராகப் பரவிட
தூசி மாசாக சாம்பலாய்ப் பறக்க
மூசி மூசியே வாழும் மானிடரில்
மூழ்கும் நோயின் புலம்பலாகுதே.

Nada Mohan
Author: Nada Mohan