தொழிலாளர் கவிதை 798 (1)

ஜெயம்
வியர்வையால் வாழ்க்கையை செய்யும் மனிதர்
வெய்யிலையும் மழையையும் பொருட்டாக நினையார்
அவரின்றி உலகம் நகராது இங்கு
அவரின்றி உயிர்கள் வளர்வதுதான் எங்கு

வியர்வை துளிகளால் பூமியை நனைத்தார்
உயர்ந்து வானத்து எல்லைகளை கடந்தார்
வாழ்க்கையின் விதைகளை நாள்தோறும் விதைத்தார்
வாழ்நாள் சாதனையாளராக அவனியில் திகழ்ந்தார்

கல்லும் முள்ளும் அவர் கதையெழுதும்
மண்ணும் விண்ணும் அவர் உழைப்பறியும்
பசியை மறந்து பணியை நேசிப்பார்
மௌனத்தால் தன் வலியெல்லாம் மறைப்பார்

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading