” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தொழிலாளர் கவிதை 798 (1)

ஜெயம்
வியர்வையால் வாழ்க்கையை செய்யும் மனிதர்
வெய்யிலையும் மழையையும் பொருட்டாக நினையார்
அவரின்றி உலகம் நகராது இங்கு
அவரின்றி உயிர்கள் வளர்வதுதான் எங்கு

வியர்வை துளிகளால் பூமியை நனைத்தார்
உயர்ந்து வானத்து எல்லைகளை கடந்தார்
வாழ்க்கையின் விதைகளை நாள்தோறும் விதைத்தார்
வாழ்நாள் சாதனையாளராக அவனியில் திகழ்ந்தார்

கல்லும் முள்ளும் அவர் கதையெழுதும்
மண்ணும் விண்ணும் அவர் உழைப்பறியும்
பசியை மறந்து பணியை நேசிப்பார்
மௌனத்தால் தன் வலியெல்லாம் மறைப்பார்