பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

தமிழே வாழி

அன்னைத் தமிழே அகிலம் போற்ற
ஆற்றல் படைத்து எழுந்தாயே
முன்னைத் தமிழாய் மூத்தோர் வளர்த்த
மன்னு புகழே செந்தமிழே
கன்னித் தமிழாய்க் காலம் வரைந்து
கணினித் தமிழாய் உருவானாய்
என்னை வளர்க்கும் இன்ப மொழியே
ஏற்றம் காண்பாய் புவிமேலே
உயிராய் எமக்கே உறவாய் நீயே
உள்ளம் மகிழப் புவியாள்வாய்
பயிராய் வளர்ந்து பலனும் தந்து
பாக்கள் வரைய உரமானாய்
கயிறாய்த் திரிந்து கணினி புகுந்து
காதல் மொழியாய் வானுயர்வாய்
அயர்வே இன்றி அமுதத் தமிழை
அவனி போற்ற வளர்ப்போமே
நெஞ்சம் நிறைந்த இனிமைத் தமிழே
நீடு புகழை அளித்தாயே
தஞ்சம் தாயே தரணி போற்றத்
தடைகள் களைந்தே உயர்வாயே
வங்கக் கடலும் வாரி யணைத்த
வண்ணத் தமிழே என்னுயிரே
பங்கம் இல்லாப் பாரில் வளரப்
பாக்கள் பாடி வாழ்த்துகிறேன்
நகுலா சிவநாதன் 1710

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading