சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நகுலா சிவநாதன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

தண்ணீரில் நிறையும் கழிவுகள்
தளராத பெருந்துன்பம் தருகிறதே!
மண்மீது வாழ்வும் கண்ணீரில் கரையுதே
மனங்களிலே மகிழ்வு விடைபெற்றுப் போகிறதே

கரையும் நீரில் கழிவுகள் நிறைவு
உறையும் பனியும் தடுக்கிறது ஓட்டத்தை
திரையும் மோதும் கடலினிலே
தீரா குப்பை சேர்வதில் துன்பமே!

வாழும் மானிடா ஒருமுறை கேள்!
தாழும் மனித வாழ்வு சகதிக்குள்ளேயா??
வீழும் கழிவும் வீணாய் கொட்ட
கடலின் மட்டமும் கடுகதியாய் உயருதே!

தண்ணீரில் தவளும் குப்பையும்
நன்னீரைப் பாழாக்குதே
மண்ணீரின் வளமெல்லாம்
கண்ணீரில் கரையுதே!

நகுலா சிவநாதன்1715

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading