மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்

தண்ணீரில் நிறையும் கழிவுகள்
தளராத பெருந்துன்பம் தருகிறதே!
மண்மீது வாழ்வும் கண்ணீரில் கரையுதே
மனங்களிலே மகிழ்வு விடைபெற்றுப் போகிறதே

கரையும் நீரில் கழிவுகள் நிறைவு
உறையும் பனியும் தடுக்கிறது ஓட்டத்தை
திரையும் மோதும் கடலினிலே
தீரா குப்பை சேர்வதில் துன்பமே!

வாழும் மானிடா ஒருமுறை கேள்!
தாழும் மனித வாழ்வு சகதிக்குள்ளேயா??
வீழும் கழிவும் வீணாய் கொட்ட
கடலின் மட்டமும் கடுகதியாய் உயருதே!

தண்ணீரில் தவளும் குப்பையும்
நன்னீரைப் பாழாக்குதே
மண்ணீரின் வளமெல்லாம்
கண்ணீரில் கரையுதே!

நகுலா சிவநாதன்1715

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading