கண்களில் செந்நீர்-3007 ஜெயா நடேசன்

கார்த்திகை மாதம் கண்களில் செந்நீர் சொரிந்த காலம் உறவுகளை பிரிந்து அலைந்த காலம் போர் கால சூழலிலே முள்ளிவாய்க்கால்...

Continue reading

பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உதிரம் சிந்தும் விவசாயி!
உழைப்பை நல்கும் உழைப்பாளி!
களைப்பைப் பாரா உழைப்பாலே
காலம் பொன்னாய் ஆக்கிடுமே!
பிழைப்பே இந்த உலகாளும்
பிறப்பு முதலாய் இறப்புவரை!
தழைக்கும் பயிரே உழவர்தாம்
தந்த உழைப்பால் வணங்கிடுவோம்!

உதிரம் சிந்தும் நல்லுழைப்பே
உணவை வழங்கும் மக்களுக்கே
வதிக்கும் வாழ்வில் வரும்வசந்தம்
வாழ்வு மலர்ந்து மணம்வீசும்!
பதிக்கும் பயிரும் பலன்தருமே
பாரில் வளர்ச்சி படர்ந்திடுமே!
விதிக்கும் காலம் விளைவுபெற
விளைத்த உழைப்பே உயர்வாகும்!
ஓடி யோடி உழைத்திடுவோம்!
ஒளிரும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
தேடித் தேடிச் செயல்புரிவோம்
தேவை தன்னை நிறைவேற்றும்!
கூடிச் சேர்ந்தே உழைத்திட்டால்
கோலங் காணும் இவ்வுலகே!
நாடி நாமும் நலஞ்செய்வோம்!
நன்றே வாழ்வோம் உழைப்போடு

நகுலா சிவநாதன்1720

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading