19
Mar
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
19
Mar
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
நகுலா சிவநாதன்
உழைப்பே உயர்வு
உதிரம் சிந்தும் விவசாயி!
உழைப்பை நல்கும் உழைப்பாளி!
களைப்பைப் பாரா உழைப்பாலே
காலம் பொன்னாய் ஆக்கிடுமே!
பிழைப்பே இந்த உலகாளும்
பிறப்பு முதலாய் இறப்புவரை!
தழைக்கும் பயிரே உழவர்தாம்
தந்த உழைப்பால் வணங்கிடுவோம்!
உதிரம் சிந்தும் நல்லுழைப்பே
உணவை வழங்கும் மக்களுக்கே
வதிக்கும் வாழ்வில் வரும்வசந்தம்
வாழ்வு மலர்ந்து மணம்வீசும்!
பதிக்கும் பயிரும் பலன்தருமே
பாரில் வளர்ச்சி படர்ந்திடுமே!
விதிக்கும் காலம் விளைவுபெற
விளைத்த உழைப்பே உயர்வாகும்!
ஓடி யோடி உழைத்திடுவோம்!
ஒளிரும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
தேடித் தேடிச் செயல்புரிவோம்
தேவை தன்னை நிறைவேற்றும்!
கூடிச் சேர்ந்தே உழைத்திட்டால்
கோலங் காணும் இவ்வுலகே!
நாடி நாமும் நலஞ்செய்வோம்!
நன்றே வாழ்வோம் உழைப்போடு
நகுலா சிவநாதன்1720
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...