திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

நகுலா சிவநாதன்

உழைப்பே உயர்வு

உதிரம் சிந்தும் விவசாயி!
உழைப்பை நல்கும் உழைப்பாளி!
களைப்பைப் பாரா உழைப்பாலே
காலம் பொன்னாய் ஆக்கிடுமே!
பிழைப்பே இந்த உலகாளும்
பிறப்பு முதலாய் இறப்புவரை!
தழைக்கும் பயிரே உழவர்தாம்
தந்த உழைப்பால் வணங்கிடுவோம்!

உதிரம் சிந்தும் நல்லுழைப்பே
உணவை வழங்கும் மக்களுக்கே
வதிக்கும் வாழ்வில் வரும்வசந்தம்
வாழ்வு மலர்ந்து மணம்வீசும்!
பதிக்கும் பயிரும் பலன்தருமே
பாரில் வளர்ச்சி படர்ந்திடுமே!
விதிக்கும் காலம் விளைவுபெற
விளைத்த உழைப்பே உயர்வாகும்!
ஓடி யோடி உழைத்திடுவோம்!
ஒளிரும் வண்ணம் வாழ்ந்திடுவோம்!
தேடித் தேடிச் செயல்புரிவோம்
தேவை தன்னை நிறைவேற்றும்!
கூடிச் சேர்ந்தே உழைத்திட்டால்
கோலங் காணும் இவ்வுலகே!
நாடி நாமும் நலஞ்செய்வோம்!
நன்றே வாழ்வோம் உழைப்போடு

நகுலா சிவநாதன்1720

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading