பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலா சிவநாதன்

தடைகளை எதிர்த்து முன்னேறு

தடைகள் எதிர்த்து முயன்றே!
தகுதியை வளர்த்துக் கொண்டிடுக!
படைகள் போலத் தடையும்
பலமாய் வந்து மோதினாலும்
நடையாய் வரும் நம்பிக்கை
நாளை பெருகும் தடையுடைத்து
குடைபோல் விரியும் குணமே
குலமாய் விளங்கும் நல்லறிவாய்

அல்லும் பகலும் உழைத்தே
அனைத்தும் ஆக்கு அறுவடையாய்
சொல்லும் செயலும் துணிவாய்த்
தொடரும் பயத்தைக் களைந்திடுக!
கல்லும் சொல்லும் கவிபோல்
கன்னித் தமிழும் மின்னிடுமே!
வெல்லும் இந்த உலகில்
வேராய் அறுப்பாய் தடைதனையே!

வார்க்கும் முகிலும் மழையாய்
வாடும் பயிர்க்கு நன்நீரே!
பார்க்கும் காட்சி படமாய்
பாலம் போடும் நுண்மாட்சி
ஏருடன் உழவன் பாடும்
ஏற்றமே காணும் நன்மாட்சி
பாருடன் படுமே முயற்சி
பாதையை அமைக்க துணிந்திடுநீ

நகுலா சிவநாதன் 1648

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading