நகுலா சிவநாதன்

உயிர்நேயம்

உயிரின் நேயம்
வலுவின் வாசம்
நிலத்தின் வாழ்வை
நிறுத்திடும் நேசம்

அறிவின் செதுக்கலில்
ஆழத்தின் பதியம்
அன்புடை நெஞ்சதில்
மிஞ்சிடும் வதனம்

காக்க வேண்டியது
உயிர் நேயம்
காத்து உதவுவது
அறிவுடை நெஞ்சு

உலகின் வறுமை
ஒழிப்பது கடனே!
உணவின் தேடல்
உறுதுணை ஆக்கும்

உதவும் கரங்கள்
உறுதுணையாகும்
உலகில் இதுவே
பெருந்துணையாகும்

நகுலா சிவநாதன் 1702

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading