20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
நகுலா சிவநாதன்
கிராமத்து வாசம்
மங்கிய காலை
மயக்கும் வேளை
தளிர்க்கும் பயிர்கள்
செழிப்புக் கண்டு
களிக்கும் மனத்தின்
அழகே தனிரகம்
தென்னோலை சலசலக்க
தெம்மாங்கு இசைபாட
வண்ணச் சூரியன்
வகையாய் ஒளிதர
எண்ணமெல்லாம்
எங்கோ பறக்கிறதே!!
தென்றலின் அணைப்பும்
தேசத்தின் மகிழ்வும்
இன்பத்தின் எழிலாய்
இன்னிசை பாட
இதயமும் குளிர்மை
பெற்றிடுமே!!
காற்றில் ஆடும்
பயிரின் அசைவும்
சேற்று. மண்ணின்
குளு குளு வாசமும்
கிராமத்தின் அழகும்
கிண்கிணி நாதமாகுதே!!
பச்சைப் பயிரும்
பார்ப்பவர் கண்ணும்
பட்டாம் பூச்சியின் பறப்பும் கொள்ளை
கொள்ளும்
கிராமத்து வாசமே!
விடியலின் அழகும்
சிந்தையின் ஊற்றும்
கடுகதி வேளையிலும்
கனவின் ஊற்றுக்களாய்
நினைவுப் பாதையில்
நடமாடும் தென்றல்
வரவுகளே!!
நகுலா சிவநாதன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...