” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

கிராமத்து வாசம்

மங்கிய காலை
மயக்கும் வேளை
தளிர்க்கும் பயிர்கள்
செழிப்புக் கண்டு
களிக்கும் மனத்தின்
அழகே தனிரகம்

தென்னோலை சலசலக்க
தெம்மாங்கு இசைபாட
வண்ணச் சூரியன்
வகையாய் ஒளிதர
எண்ணமெல்லாம்
எங்கோ பறக்கிறதே!!

தென்றலின் அணைப்பும்
தேசத்தின் மகிழ்வும்
இன்பத்தின் எழிலாய்
இன்னிசை பாட
இதயமும் குளிர்மை
பெற்றிடுமே!!

காற்றில் ஆடும்
பயிரின் அசைவும்
சேற்று. மண்ணின்
குளு குளு வாசமும்
கிராமத்தின் அழகும்
கிண்கிணி நாதமாகுதே!!

பச்சைப் பயிரும்
பார்ப்பவர் கண்ணும்
பட்டாம் பூச்சியின் பறப்பும் கொள்ளை
கொள்ளும்
கிராமத்து வாசமே!

விடியலின் அழகும்
சிந்தையின் ஊற்றும்
கடுகதி வேளையிலும்
கனவின் ஊற்றுக்களாய்
நினைவுப் பாதையில்
நடமாடும் தென்றல்
வரவுகளே!!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan