நகுலா சிவநாதன்

பொங்கும் உளமே
தங்கும் தையே!!

பொங்கும் உளமே
தங்கும் தையே!!
எங்கும் எழிலாய்
பூக்கும் மனமே!!

மங்கா வரமே
மானிட உரமே
மழையாய் வருவாய்
மண்ணை நிறைப்பாய்

பையவருவாய் பலனைத் தருவாய்
வையம் செழிக்க
வருவாய் தையே!!

கரும்பு செழிக்க
கதிரவன் ஒளிர
ஆவினம் பெருக
ஆனந்தம் பொங்க
கொண்டாடுவோம்
நற்பொங்கல்

உளமே பொங்க
வளமே பெருக
களமே கதிராய்
காணும் தையே!!

நகுலா சிவநாதன்1745

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading