நகைப்பானதோ மனிதநேயம் …

வசந்தா ஜெகதீசன்
வரண்டே போகுது மனிதப்பாசம்
வெற்றியும் நதிபோல் அழித்திடும் கோலம்
துடிப்பும் பாசமும் துவண்டிடும் உலகில்
நடிப்பின் வேஷமே நம்பிக்கையாகுது
நாளும் நாளும் நலியுது நேயம்
நலிந்திடும் வேளையும் உதவிடல் குன்றும்
போரும் துயரும் வாட்டிடும் வேளை
போக்கிடமற்று தவித்ததே மனிதம்
இயற்கை அனர்த்தம் இன்னல் விளைத்தது
இயல்பு வாழ்வே இருண்டு கறுத்தது
உயிர்கள் இழந்த உணர்வின் துடிப்பு
உலகே உதவிட வந்திட்ட முனைப்பு
மனிதநேயம் மறுபடி தளிர்த்ததோ
தவித்திடும் உறவுகள் தாகம் அறிந்ததோ
உபாதை களைந்திட ஒற்றுமை ஓங்கிட
உலகே மனிதத்தை மதித்த நேயம்
மீண்டுமாய் தளிர்த்தெழு மனிதத்தை காத்திடு
மறுமறுபடி வலியேவேண்டாம்
மகிழ்வின் அரும்பேமலர்வாயா!மலரும்ஆண்டில்நிலைப்பாயா!நன்றி மிக்கநன்றி.

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading