நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம் …

வசந்தா ஜெகதீசன்
வரண்டே போகுது மனிதப்பாசம்
வெற்றியும் நதிபோல் அழித்திடும் கோலம்
துடிப்பும் பாசமும் துவண்டிடும் உலகில்
நடிப்பின் வேஷமே நம்பிக்கையாகுது
நாளும் நாளும் நலியுது நேயம்
நலிந்திடும் வேளையும் உதவிடல் குன்றும்
போரும் துயரும் வாட்டிடும் வேளை
போக்கிடமற்று தவித்ததே மனிதம்
இயற்கை அனர்த்தம் இன்னல் விளைத்தது
இயல்பு வாழ்வே இருண்டு கறுத்தது
உயிர்கள் இழந்த உணர்வின் துடிப்பு
உலகே உதவிட வந்திட்ட முனைப்பு
மனிதநேயம் மறுபடி தளிர்த்ததோ
தவித்திடும் உறவுகள் தாகம் அறிந்ததோ
உபாதை களைந்திட ஒற்றுமை ஓங்கிட
உலகே மனிதத்தை மதித்த நேயம்
மீண்டுமாய் தளிர்த்தெழு மனிதத்தை காத்திடு
மறுமறுபடி வலியேவேண்டாம்
மகிழ்வின் அரும்பேமலர்வாயா!மலரும்ஆண்டில்நிலைப்பாயா!நன்றி மிக்கநன்றி.

Author: