19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நாதன் கந்தையா 16.5.23
பெற்றவள்.
————————-
மீண்டு புவிமீது
வெண்மதியாய் வலம்வந்து
கூண்டாய் மடியிருத்தி
கோதி முலையூட்டி
வானைப்போல்
வளியைப்போல் – என்
வலம் இடம் அறிந்தவளே.
விஞ்ஞானம் மெய்ஞானம்
எஞ்ஞானம் என்றாலும்
உன் ஞானம் ஒன்றேதான்- என்
உள் நெஞ்சுள்
ஓங்காரம் ஆனவளே.
மெல்லத்திருவாகி
மேவி நின்ற பொற்பதமே.
மண்ணில் நடைபயின்ற
மாலை குளிர் காற்றே
மலராய் சந்தனமாய் -என்
மண்டைக்குள் மணப்பவளே.
தண்ணீருள் கலந்த
பிராணன்போல் என்னுயிரில்
பின்னி பிணந்துவிட்ட
பெரும்பேறே பொக்கிசமே.
மூலம் நீயானாய்
முழுவதுமே நீதானே
காலத்தும் கடைசிவரை
காணிக்கை இல்லாமல்
காட்சி தந்த
கலைமகளும் நீதானே
தாயே தலை மகளே
தாள் பணிந்தேன் என்னுயிரே.
-நாதன் கந்தையா-
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...