சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நாதன் கந்தையா

நீர்க்குமிழி.

கீழ்வானம் அழகொளிர்ந்து
சிரிக்க கண்டேன்….
கோரை பூநுனியில் தும்பி வந்து
அமரக்கண்டேன்….
மீன்கொத்தி கீழ்நோக்கி
பறக்கக்கண்டேன்….
மின்மினிகள் குருவி கூட்டுள்
ஒளிரக் கண்டேன்….
கொடுங்கோலாய் போரொன்றும்
நிமிரக்கண்டேன்…..
கனமழையில் ஆடொன்று நனையுதென்று
கண்ணீர் விட்டழுத
நரியை கண்டேன்…..
பாதை மாறி கரைமீண்ட கலிங்க நாட்டான்
கடைவிரித்து படை நகர்த்தும்
இலங்கை கண்டேன்….
சோவியத்து ரசியாவில் நோட்டோ செய்யும்
நெறியற்ற பொறிப்பந்தல்
அதுவும் கண்டேன்….
நேற்றுப்போல் நாளைக்கும்
இருக்கும் என்றால்
நீயும் ஒரு பைத்தியம்தான்
என்றேசொல்வேன்….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாய் போகும் கதை
நீர்க்குமிழிபோல….
காற்றொருநாள் அரைநாழி
விடுப்பெடுத்தால்
கந்தலாகி போகும் கதை
நீர்க்குமிழிபோல…..

-நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading