“நான் நானாக”

நேவிஸ் பிலிப் கவி இல்(416)
நான் நானாகி
மனதளவில் தோப்பாகி
எதிர் பார்ப்பு ஏதுமின்றி
செழித்தே நான் வளர்ந்திடுவேன்

எனக்கு நானேயென
என் முனங்கல் இசையாக
எனக்கென ஓர் உலகம்
என்னைச் சுற்றி அமைத்திடுவேன்

எ்னை நாடி வருவோரை
அனபோடு அணைத்திடுவேன்
மனம் நோகா வண்ணம்
எந்நாளும் காத்திடுவேன்

என் கவலை என்னோடு
இடர் வரினும் கலங்க மாட்டேன்
நடப்பது நடக்கட்டும்
அடுத்தவர் வார்த்தையில்
நோக மாட்டேன்
நான் நானாக இருக்கும் வரை
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan